Loading....

சர்வ விஷ்ச அபியான் (SSA) திட்ட நிதியின் முதல் தவணை தொகையை உடனே வழங்க வேண்டும் – எஸ்ஐஓ வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு
நிறுத்தி வைத்திருக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கிறது என்ற காரணத்திற்காகவே இப்படி மலிவான பழிவாங்கல் நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்கிறது. இது தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தையும், மாணவர்களின் நலனையும் பாதிக்கும் போக்காகும்.

ஒன்றிய அரசு தனது அரசியல் பழிவாங்கலை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சர்வ விஷ்ச அபியான் (SSA) திட்ட நிதியின் முதல் தவணை தொகை ₹573 கோடியை உடனே வழங்க வேண்டும்.

தமிழ்நாடு கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை நாடறியும். எனவே தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கு இவ்வாறு தடங்கல் செய்யும் எந்த ஒரு நடவடிக்கையையும் பாஜக கைவிட வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு 100 ரூபாய் வழங்கினால் 29 ரூபாய் மட்டுமே மாநிலத்திற்குத் திரும்பிக் கொடுக்கப்படுகிறது. 2018 – 2023 வரை 8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கி உள்ளோம். ஆனால் திரும்பி வழங்கியது 1.58 லட்சம் கோடி. இவ்வாறு ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்கும் நிலையில், இப்போது SSA திட்ட நிதியையும் நிறுத்துவது ஏற்புடையதல்ல. எனவே அதை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக வலியுறுத்துகிறோம்.

– முஹம்மது ஜாஃபர்,
மாநில இணைச் செயலாளர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.

Back To Top