Loading....

Events for October 12, 2024 - June 30, 2024

கண்டன ஆர்ப்பாட்டம்: NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து

திருச்சி

NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் பாலக்கரை பகுதியில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ், முஹம்மது ஜாஃபர் மற்றும் SMI மாவட்ட செயலாளர் ரோஷன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

FIKR MAJLIS: புதிய உறுப்பினர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம்

சென்னை

சென்னை செங்குன்றத்தில் மாநில அளவிலான FIKR MAJLIS எனும் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக Dr. KVS ஹபீப் முஹம்மது, அதாவுல்லா, V.S. முஹம்மது அமீன், நாகூர் ரியாஸ், Dr.முஹைதீன், முஹம்மது சுல்தான் பாகவி, காமராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுமார் 100   பங்கேற்பாளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.  

கண்டன ஆர்ப்பாட்டம்: NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து

சென்னை

NEET, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் சென்னை செங்குன்றத்தில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ், முஹம்மது ஜாஃபர் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நாகப்பட்டினம் MLAவுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு

சென்னை

நாகப்பட்டினம் MLA ஆளுர் ஷா நவாஸுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. எஸ்ஐஓ சார்பாக புத்தங்கங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கரூர்,புதுக்கோட்டை

கரூர், புதுக்கோட்டை

எஸ்ஐஓ மாநிலத் தலைவர், நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கரூர் மற்றும் புதுக்கோட்டையில் ஊழியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது ஜாஃபர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.

தேசிய கல்வி வளாகச் செயலாளரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்

திருச்சி, சென்னை

எஸ்ஐஓவின் தேசிய கல்வி வளாகச் செயலாளர் இம்ரான் ஹுசைன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள கல்வி வளாகங்களில் எஸ்ஐஓ உறுப்பினர்களுடன் சந்திப்பு, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, இஃப்தார் மற்றும் ஊழியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கோவை

கோயம்புத்தூர்

எஸ்ஐஓ மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர்களின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் அங்கமாக இரண்டு நாட்கள் கோவை சென்றனர். அங்கு எஸ்ஐஓ ஊழியர் கூட்டம், மாவட்ட ஆலோசனைக் குழு சந்திப்பு, ஜஇஹி பொறுப்பாளர்களுடன் சந்திப்பு, மாணவர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் இலச்சினை வெளியீடு

கோயம்புத்தூர்

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. பரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜஇஹி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, மதுரை, கயத்தாறு

மதுரை, கயத்தாறு

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக மதுரை மற்றும் கயத்தாறு ஊழியர்களுக்கான கூட்டம் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் அப்துல் கஃபூர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். மதுரை கயத்தாறு

மத நல்லிணக்க மீலாது விழா

திருச்சி

எஸ்ஐஓ திருச்சி மாவட்டம் சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர் அ. மார்க்ஸ், சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மது அமீன், அருட்தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சகோதர சமுதாயத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கலந்துகொண்ட நபர்களுக்கு எஸ்ஐஓ, சத்தியசோலை சார்பாக புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கடையநல்லூர், விருதுநகர்

கடையநல்லூர், விருதுநகர்

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கடையநல்லூர் மற்றும் விருதுநகரில் ஊழியர்களுக்கான கூட்டமும், JIH பொறுப்பாளர்களுடன் சந்திப்பும் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது தெளஃபீக், முஹம்மது சாதிக் அலி ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். கடையநல்லூர் விருதுநகர்

Back To Top